திருக்குறள்

447.

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.

திருக்குறள் 447

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்.

பொருள்:

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.

மு.வரததாசனார் உரை:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.